இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் கங்கை ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் ஒருவர் தனது கையில் பாட்டில் ஒன்றை வைத்துள்ளார். அந்த பாட்டிலில் பால் உள்ளது. இதனை கங்கை ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றுகிறார். இதனைப் பார்த்த வாலிபர் அங்கிருந்து வந்து பாட்டிலில் இருந்து விழும் பாலை தனது கைகளால் குடிக்கிறார்.

அதன் பின் அந்தப் பெண்ணை கும்பிட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.