
யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஐஏஎஸ் பதவி வழங்கப்படும். ஐஏஎஸ் அதிகாரிகளின் பணி என்பது நிர்வாக பணிகளில் முக்கிய இடத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் ஐஏஎஸ் தேர்வு எழுதுகின்றனர். மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த கமிஷனர், மாநில தலைமை செயலாளர், இந்திய அமைச்சரவை செயலாளர் என பதவி வகிக்கின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ஆகியவை கொடுக்கப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற முதல் காலத்திற்கு 56,100 ரூபாய் அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. மூத்த அதிகாரிகளுக்கு அதிகப்படியாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி ஏழாவது ஊதிய கமிஷன் முறைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் சேவை காலத்திற்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படுகிறது. 4 வருடம் துணை மாவட்ட ஆட்சியர் பதவியில் அடிப்படை சம்பளமாக 56,100 ரூபாய் கொடுக்கப்படுகிறது. 5 முதல் 8 வருடம் உதவி மாவட்ட ஆட்சியர் பதவியில் அடிப்படை சம்பளமாக 67,700 ரூபாய் கொடுக்கப்படுகிறது. 9 முதல் 12 ஆண்டு காலம் சேவை புரியும் மாவட்ட ஆட்சியருக்கு 78,800 ரூபாய் அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
13 முதல் 16 வருடம் பணி செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 1,18,500 அடிப்படை சம்பவமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு துறை சார்ந்த கமிஷனராக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த காலகட்டத்தில் 16 முதல் 24 ஆண்டு காலம் வேலை பார்ப்பவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1,44,200 ரூபாய் வழங்கப்படுகிறது. 20 முதல் 30 ஆண்டுகால பணிக்கு 1,82,200 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது போக அகவிலை படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, பயண கொடுப்பனவு ஆகியவையும் கூடுதலாக வழங்கப்படும்.