அரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட்டை சேர்ந்தவர் ஷீத்தல் (20). இவர் பிரபலமான மாடல் அழகி மற்றும்  பல்வேறு மியூசிக் வீடியோக்களையும் வெளியிட்டு உள்ளார். கடந்த 14ஆம் தேதி சூட்டிங் செல்வதாக கூறிவிட்டு சென்ற ஷீத்தல் நேற்று முன்தினம் கார்கோடா பகுதியில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து அவரது காதலன் சுனிலிடம் நடத்திய விசாரணையில் கார் கட்டுக்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்ததாகவும், அதில் ஷீத்தல் நீரில் மூழ்கியதாகவும் கூறினார். ஆனால் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், சுனில் தான் ஷீத்தலை கழுத்தை நிறுத்தி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை இறுதியில் ஒப்புக்கொண்டார். அந்த விசாரணையில், சுனிலுடன் காரில் ஷீத்தல் சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் கோபத்தில் சுனில் ஷீத்தலை அடித்து கழுத்தை நெறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் காரை ஷீத்தலின் உடலுடன் கால்வாயில் தள்ளி விட்டுள்ளார். சுனில் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது திருமண பிரபோசலை ஷீத்தல் நிராகரித்து உள்ளார். அதுவும் கொலைக் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.