சண்டிகர் மாநிலத்திலுள்ள ஹரியானாவில் சமல்ஹா பகுதியின் காங்கிரசின் எம்.எல்.ஏ தரம் சிங் சோக்கர் ஆவார். இவருக்கு சிக்கந்தர் சிங் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து மிஹிரா குரூப்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்துகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-2022 இல் வீடு கட்டி தருவதாக 1500 பேரிடம் சுமார் ரூபாய் 400 கோடி வரை வசூலித்துள்ளனர். வீடு கட்டி தருவதாக ஏமாற்றியதால் மிஹிரா குரூப்ஸ் மீது குருகிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2023 ல் இந்த வழக்கு அமலாக்கதுறைக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வந்த நிலையில் செப்டம்பர் 2 ம் தேதி சிக்கந்தரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. அப்போது சிக்கந்தர் தனக்கு உடல்நிலை மோசமாக உள்ளது எனக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். சிகிச்சைக்காக அவர் செப்டம்பர் 16ஆம் தேதி வரை மருத்துவமனையில் இருந்தார். இதனை அடுத்து மீண்டும் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய முற்பட்டது. மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக்கூறி செப்டம்பர் 26 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 3ஆம் தேதி வரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த அமலாக்கத்துறை மருத்துவமனையின் சிசிடிவி கேமராவை பரிசோதனை செய்தனர்.இதில் சிக்கந்தர் காவல்துறையினரின் பாதுகாப்பை மீறி காரில் வெளியே செல்வது, ஊர் சுற்றுவது,தேர்தல் பணிகளை செய்வது என இருந்துள்ளார். இந்த சிசிடிவி பதிவுகளை அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் சமர்ப்பித்தது. உடனே அடுத்த 24 மணி நேரத்தில் சிக்கந்தர் மற்றும் தரம்சிங் சோக்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் காவல்துறைக்கு உத்தரவிட்டது.