சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால், நாளை (14 ஆம் தேதி) தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்தம் வலுப்பெறும். இதன் காரணமாக, 15-16 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13 ஆம் தேதி (இன்று) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

அதிக மழை தொடர்ச்சி வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மாற்றங்களினால் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு மிக அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.