
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் செய்தியாளரிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்எல்சி பிரச்சனை பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. என்எல்சியில் நமது தொழிலாளர்கள் நிலத்தை கொடுத்துட்டு வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல், பணி நிரந்தரம் இல்லாமல், எத்தனையோ ஆண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த NLCஇல் அவர்களுக்கு உரிய உரிமையை பெற்று தர வேண்டும். அந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை நான் கேட்டிருக்கிறோம்.
கேப்டன் விருதாச்சலம் தொகுதியில் ஜெயிச்சதுல இருந்து நாங்க நேரடியா பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பிரச்சனை இன்னைக்கும் தீர்வு வரல. எனவே என்எல்சி மக்களுக்காக இன்னைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கவர்னருக்கு கவனத்தை கொண்டு சென்று, என்எல்சி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு நாங்க கேட்டிருக்கிறோம்.
அதற்கு அடுத்ததாக நமது மீனவ மக்கள் இன்றைக்கும் பாருங்க கடலுக்கு சென்று அவங்க சரியான முறையில் அவங்க தொழிலை செய்ய முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். அவர்களுடைய உயிருக்கோ, உடைமைக்கோ இன்னைக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இருக்கு. எனவே மீனவர்கள் பிரச்சனைக்கும் நிரந்தரமாக தீர்வு ஏற்பட்டு, மீனவர்கள் தைரியமாக அவர்கள் தொழில் செய்ய இந்த அரசு மத்திய – மாநில அரசுகள் நிச்சயம் செவி சாய்க்க வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறோம்.
அதற்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவை மீட்டெடுப்பது தான். இதை நான் வலியுறுத்தி கவர்னர் கிட்ட கேட்டுள்ளேன். கட்சத்தை மீட்டெடுத்து, தமிழக தமிழ்நாட்டுக்கு தரும் பொழுது தான் மீனவர்களுடைய பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது அதுக்கு அடுத்த பிரச்சனை கனிம வள கொள்ளை. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் நிர்ணயித்த அளவை தாண்டி கனிம வள கொள்ளை தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் நடக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது என்பதையும் அவர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம். அவரும் அதை ஒத்துக் கொண்டார். அது மட்டுமல்ல அமலாக்கத்துறை மூலமாக எல்லா இடத்திலையுமே ரைடு போயி, இன்னைக்கு அவங்க பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கனிம வளம் தான் ஒரு நாட்டினுடைய வளம். இன்னைக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் பக்கத்து ஸ்டேட்டிற்கு… கேரளா – கர்நாடகா – ஆந்திரா என்று தமிழ்நாட்டின் வளங்களை இன்னைக்கு சுயநல அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறவங்க… தங்கள் சுயலாபத்துக்காக அத்தனை கனிம வளத்தையும் கொள்ளையடிச்சு… பக்கத்து ஸ்டேட்டிற்கு அனுப்புகிறார்கள்.
இது தடுக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இது நாலுமே சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எடுக்க வேண்டிய விஷயம். அதனால கவர்னர் அவர்களை சந்தித்து இந்த நாலு பிரச்சனைக்கும் தமிழ்நாட்டுக்கு உரிய தீர்வு வரவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். தமிழக பிரச்சினையாக 2 நாங்க சொல்லி இருக்கோம் என தெரிவித்தார்.