உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஜான்சி உலா பத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பாபா கபுதாரா (45). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வசிக்கும் கிராமத்திற்கு அருகில் தகோரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  சில சாதிவெறியர்கள் பாபா கபுதாராவை அடித்து தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளுக்கு சாணம் எடுப்பது, உணவு வைப்பது, அதன் இருப்பிடங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர். ஆனால் பாபா இதனை செய்ய மறுத்துள்ளார். இதை தொடர்ந்து பாபா தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஆதிக்க சாதியினர் காரில் வந்த அவரை அடித்து தூக்கிச் சென்றுள்ளனர்.

ஆதிக்க சாதியினர் தங்களது கிராமத்திற்கு பாபாவை கொண்டு சென்று அடித்து துன்புறுத்தி தலைகீழாக தொங்கவிட்டுள்ளனர். மேலும் அவரது முகத்தில் தண்ணீரை வேகமாகத் தெளித்து மூச்சு விட முடியாமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவரது தலை முடியை மொட்டை அடித்து தெருத்தெருவாக அழைத்துச் சென்று கேலி, கிண்டல் செய்து அவரை அவமானப்படுத்தி உள்ளனர். இதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாபாவை கொடுமை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

 

झाँसी के बड़ागांव थाना क्षेत्र pic.twitter.com/u0JzMhYvA7

— जनाब खान क्राइम रिपोर्टर (@janabkhan08) October 25, 2024