தென் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று மதுரை அரசு மருத்துவமனை. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாகவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு என தனி வளாகம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு ஒன்று மகப்பேறு அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளிப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டில் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிசுவின் உடலை மீட்டனர். பின் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.