
உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான பானு ரத்தோர் மற்றும் சகோதரர் ஹிமான்ஷு ரத்தோருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் வேறு ஜாதி வாலிபரை காதலிக்க கூடாது என்று நேஹாவை அவருடைய தந்தை எச்சரித்துள்ளார்.அதோடு காதலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி தன்னுடைய தந்தை மற்றும் சகோதரனுக்கு தெரியாமல் காசியாபாத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சூரஜை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தகவல் நேகாவின் தந்தை மற்றும் சகோதரர் இருவருக்கும் தெரியவந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி நேகாவை அவர்கள் கொடூரமாக கொலை செய்தனர். அதோடு அவருடைய உடலை தீ வைத்து எரித்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் நேகாவை அவர்கள் ஆணவக் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இருவரையும் கைது செய்து தற்போது காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.