
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி திருப்பூரின் பந்துவீச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதில் அந்த அணியின் கேப்டன் ஆர்.அஸ்வின் 18 ரண்களும், சிவம் சிங் 30 ரன்களும், ஜெயந்த் 18 ரண்களும் எடுத்தனர்.
Ash அண்ணா Not Happy அண்ணாச்சி! 😶🌫
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar #TNPL #TNPL2025 pic.twitter.com/Csc2ldnRS3
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
திருப்பூர் தரப்பில் அறிமுகமான இசக்கிமுத்து 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் வழங்கி 4 விக்கட்டுகளை எடுத்தார். மேலும் மதிவாணன் 3 விக்கெட்டுகளும், சாய் கிருஷ்ணர் 2 விக்கட்டுகளும் எடுத்தனர். அடுத்ததாக களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 15.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் விக்கெட் கீப்பர் துஷர் ரஹேஜா 66 ரன்கள் எடுத்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிச்சாகி அஸ்வினின் காலில் படுவது போல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைத்தார். ஆனால் களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் நடுவர் அதனை கண்டுக்காமல் சென்று விட்டார். வேறு டி ஆர் எஸ் வேறு இல்லை என்பதால் அஸ்வின் கோபத்தில் பேட்டை தனது காலில் அடித்து விட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.