
செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, சட்டம், ஒழுங்கா ? அது தமிழ்நாட்டுல இருக்கா ? தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பேசுறீங்களே நீங்க… சட்டம் ஒழுங்கு சரியில்ல. பெண்களை யாரும் வெளியில போக முடியல. எங்க பாத்தாலும் பார்.. காலையில் திறந்தாங்கன்னா…. 24 மணி நேரமும் போய்கிட்டு இருக்கு. அதுவும் லைசென்ஸ் இல்லாத பார்வைகள் நிறைய நடக்குது. இதெல்லாம் நீங்க பத்திரிகைக்காரர்கள் தான் வெளியில கொண்டு வரணும். என்னன்னு தெரியல…
திமுக அரசாங்கத்தை பத்தி பேசுறதுக்கு, பத்திரிகையாளர்களே பயப்படுறாங்க, அதுதான் நடக்குது இப்போ… நம்ம ஏன் சொல்லுவானு… நம்ம டிவில வந்துட்டா நாளைக்கு எதுவும் ஆகுமோ, அப்படிங்கிற மாதிரி நினைச்சுட்டு இருக்கீங்க.. விலைவாசி உயர்வு வருவதற்கு… தக்காளி – வெங்காயம் மெயின். வீட்டு சமையலுக்கு லேடிஸ்_க்கு வேணும். அது இல்ல.
நீங்க விவசாயத்துக்கு என தனி பட்ஜெட்என சொன்னீங்க… விவசாய சம்பந்தமான முடிவுகளை சரியாக எடுக்கணும் அல்லவா… நம்ம தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தேவைப்படும் ? அப்படிங்கிறதை பார்த்து அதற்கு முன்னேற்பாடா நீங்கள் செய்தீர்கள் என்றால் ? நம்ம தமிழ்நாட்டிலேயே விளைவிக்கலாம். நம்ம தமிழ்நாட்டிலேயே மக்களுக்கு கொடுக்கலாம். அந்த விஷயம் உங்களுக்கு தெரியல என தெரிவித்தார்.