திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதலைப்பட்டி மக்கள் நகரில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மினுக்கம்பட்டி பிரிவு அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் ராஜீவ் காந்தி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ் காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிளில் சென்ற தொழிலாளி…. பள்ளத்தில் தவறி விழுந்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாலிபர்… கனமழையால் நேர்ந்த விபரீதம்…. மதுரையில் அதிர்ச்சி…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய வீட்டில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் பாலசுப்ரமணியம் பரிதாபமாக…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more