மேற்கு வங்காளம் கொல்கத்தா ஆர்.ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவமனையில் பணியாற்றிய 30 வயது பெண் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளி சஞ்சய் ராய் எதிராக புதிய குற்றவியல் சட்ட பிரிவுகளின் கீழ் மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா கோர்ட் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வருகின்ற 11ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஜூனியர் டாக்டர் ராஜதீப் கூறும் போது பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ தொடக்கத்தில் குறிப்பிடாமல் விட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும், வருகின்ற 9-ம் தேதி இந்த சம்பவம் நடந்து 90 நாட்கள் ஆக உள்ளது எனவே குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் தேதி முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும் இந்த போராட்டம் முழுமையாக முடிந்து விடாது என்றும், உயிர் இழந்த பெண் மருத்துவர் நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என ஜூனியர் டாக்டர்கள் சார்பில் ராஜ்தீப் செய்தியாளர்களிடம் கூறினார்.