
பீகார் மாநிலம் அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மன் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் எழுந்து விழுந்த பதினைந்தாவது பாலம் இதுவாகும். 2008 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம் 2017 ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு 2021 ஆம் வருடம் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஏற்கனவே பாலம் இடிந்து விழுவது தொடர்பாக 15 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்கது.