தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்தில் முடிவடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது ஆர்த்தி ஜெயம் ரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

“திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவாகரத்து குறித்து தனக்கு முன்பே தெரியாது என்றும், ஜெயம் ரவி தனது கருத்தை கேட்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஆர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பமாக வாழ்ந்து வந்த இவர்கள் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என கூறபடுகிறது.