இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ரோகத் கட் சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு 5 பேர் தங்களுடைய காரில் சுற்றி பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரோகத் கட் நெடுஞ்சாலையில் உள்ள ராணி நல்லா என்ற பகுதியை கடந்து சென்றனர். அது மலை பாங்கான பகுதி என்பதால் வளைவுகள் நிறைந்திருந்தது.

இந்நிலையில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் தீடிரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.நொடி பொழுதில் ஏற்பட்ட  இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் உயர் தப்பினார். இந்த தகவல் உடனடியாக மீட்பு குழுவினருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.