டெல்லியில் வருமான வரித்துறையில் வேலைக்கு சேர மூத்த அரசு அதிகாரி ஒருவர் இன்று ரூ.45 லட்சம் தர வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த அரசு அதிகாரி தொடர்ந்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த மே 31ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த அதிகாரி சார்பில் அவருடைய வீட்டில் இருந்த கூட்டாளி முதல் தவணையாக ரூ. 25 லட்சம் லஞ்சமாக பெற்று இருக்கிறார்

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அந்த அதிகாரியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும் நேற்று கோட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் 14 நாள் சிறை தண்டனை விதித்தது.

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், அந்த அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் 3.5 கிலோ தங்கம் 2 கிலோ வெள்ளியும் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூபாய் 3.5 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரூ.1 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 25 வங்கி கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.