ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

குறிப்பாக இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இறுதி போட்டியில் வெற்றி பெற போகும் அணி குறித்த கணிப்பினை இந்திய முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது, நான் தொடர்ந்து ஆதரிக்கும் அணி தோல்வி அடைந்தது. எனவே பழைய ஃபார்முக்கு திரும்ப உள்ளேன். அதாவது மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறும் என கூறினேன். ஆனால் அது தோல்வியடைந்தது.

அதேபோல ஆர்சிபி அணிக்கு எதிராக தகுதி சுற்றி 1இல் பஞ்சாப் கிங்ஸ் ஆக இருந்தாலும் சரி, தகுதி சுற்றி 2இல் மும்பையாக இருந்தாலும் சரி நான் ஆதரித்த அணிகள் தோல்வியடைந்தனர் என கூறினார்.

சேவாக்கின் குழப்பமடைந்த பதிலால் தொகுப்பாளர் மீண்டும் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு சேவாக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என நினைக்கிறன்  என பதிலளித்தார்.