இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் டி20 உலக கோப்பை போட்டியுடன் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் ஏதேனும் ஒரு அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அவர் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கும் நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.