தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றால் தொழில் நிறுவனங்கள் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறி இருந்ததாவது, தமிழ்நாடு அரசின் டான்சீட் திட்டம் ஆனது தொடக்க நிலையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 6 பதிப்புகள் நடைபெற்ற நிலையில், தற்போது 7ம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இந்து திட்டம் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 169 நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மையாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதோடு இதர துறை சார்ந்த புத்தகத்தில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயன் பெறும் பயனிகளுக்கு ஓராண்டு காலம் தொழில் வளர்ச்சிக்கான பயிற்சி, தொழில் முனைவு வழிகாட்டல், தேசியம் மற்றும் பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தத் திட்டம் 3 சதவீத பங்குகளை உதவிப்பெறும் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும். வருங்காலத்தில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் மாதிரிகளைக் கொண்டு சமூகத்தில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும் தொழில் நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பட முடியும். இதில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டினை தலைமையாக கொண்டிருக்க வேண்டும். அதோடு ஒன்றிய அரசின் டி பி ஐ ஐ டி என்ற தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால்  www.startuptn.in இணையதளத்தின் வழியாக ஜனவரி 15ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.