
மராட்டிய மாநிலம் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது . தற்போது வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் என்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சி பாஜக கூட்டணி கட்சிகளும் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.
288 சட்டமன்ற தொகுதிக்கான இட ஒதுக்கீடு தற்போது நடந்து வருகிறது. சென்ற மக்களவைத் தேர்தலில் மகாவிகாஸ் அகாதி- இந்திய கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதனால் தற்போது பிரச்சாரத்தை கூடுதல் கவனத்துடன் நடத்த வலியுறுத்தப்படுகிறது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். துலே பகுதியில் பிரச்சாரம் செய்த இவர் கூறியதாவது, சத்ரபதி சிவாஜி சிலை வைப்பதில் கூட பாஜகவினர் ஊழல் செய்துள்ளனர் இதனால் மராத்திய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.
பாஜகவினர் இந்தியாவை பொருளாதாரத்தில் உயர்ந்த நாடாக கொண்டு வருவோம் எனக் கூறினர். ஆனால் தற்போது நமது அண்டை நாடுகளை விட மோசமான நிலையில் இந்தியா உள்ளது. பசி, பட்டினி, கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடக்கவுள்ள தேர்தல் மகாராஷ்டிராவை மட்டுமல்ல நாட்டின் அரசியலமைப்பையே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உடையதாகும். இந்தத் தேர்தலுக்குப் பின்னர் மோடி ஆட்சி நிச்சயமாக தோற்றுவிடும். 2024 அதிக பட்டினி குறியீட்டில், பாகிஸ்தானை விட மிக மோசமான நிலையில் இந்தியா உள்ளது. இலங்கை, பர்மாவை விட இந்தியா பின்னோக்கி உள்ளது. இவ்வாறு பிரச்சாரத்தின் போது சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கூறினார்.