இந்தியா மற்றும் நியூசிலாந்து இடைய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும் நிலையில் நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்ட நிலையில் இன்று மீண்டும் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்திய அணியின் வீரர்கள் சொதப்பினர். விராட் கோலி டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், சர்ப்ராஸ் கான், கே எல் ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகியோரும் டக் அவுட் ஆகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 31.6 ஓவரில் ‌ வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்டு 20 ரன்கள் எடுத்த நிலையில் அவர் காலில் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

தற்போது பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மண்ணில் இந்திய அணி விளையாடிய நிலையில் 50 ரன்கள் சுருண்டது இதுவே மிகவும் மோசமான சாதனையாக கருதப்படுகிறது. ஒரே இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறியது இது ‌4-வது முறையாகும். மேலும் சொந்த மண்ணில் விளையாடும் போது மிகவும் வலிமை வாய்ந்த அணியாக திகழும் இந்தியா தற்போது மிகவும் மோசமான முறையில் தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்கள் மத்தியில் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.