கான்பூரில் நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில், 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள ஈரப்பதம் காரணமாக, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நடத்த முடியாது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நடுவர்கள் மற்றும் மைதானம்  பராமரிப்பாளர் குழு ஆடுகளத்தை ஆய்வு செய்தபோது, முறையான விளையாட்டிற்கு ஏற்ற நிலைமை இல்லாதது தெரியவந்தது. இதனால் 3-வது நாள் ஆட்டத்தை கைவிட வேண்டிய நிலை உருவானது. மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக போட்டி நடத்துவதில் சிக்கல் இருந்து  வருகிறது.

இந்த நிலையில், போட்டியின் மீதமுள்ள நாட்கள் எப்படி நடைபெறும் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரிகள் விரைவில் அறிவிப்பு வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.