அரசு பள்ளிகளில் படிக்கும் 3,5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ‘ஸ்லாஸ்’ தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘மாநிலக் கற்றல் அடைவு என்ற தேர்வு’ அவ்வபோது நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 3,5,8-ம் வகுப்பு படிக்கும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு இன்று முதல் 6-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. கொள்குறி வினாத்தாள்களை அடிப்படையாக  கொண்டு இத்தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வில் 3-ம் வகுப்பு வகுப்புக்கு 35 கேள்விகளும், 5ம் வகுப்புக்கு 45 கேள்விகளும், 8ம் வகுப்பு 50 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கூடுதல் வழிகாட்டுதலின் படி, தேர்வுக்கு முந்தைய நாள் வட்டார வள மையத்திலிருந்து வினாத்தாள்களை பெற்று பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பின்னர், மீண்டும் வினாத்தாள்கள் மற்றும் ஓஎம்ஆர் விடைத்தாள்களை பெற்று வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.