முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது சென்னை முதன்மை செசன்ஸ் போட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் குமார் தனது இதய சிகிச்சையை மேற்கொள்ள அமெரிக்க செல்ல அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையின் முடிவில், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.