
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேருக்கு படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதி மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது மாநில முதல் மந்திரி மோகன் சரண் மாஜியை கண்டித்து அவரது வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு மற்றும் தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதுகாப்பு பணி மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை சோதனை செய்ய கூடுதல் கமிஷனர் நரசிங்கா போலோ அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள காவல்துறையினரிடம், “பேரிகேட் தடுப்புகளை தாண்டி யாரேனும் உள்ளே நுழைய முயன்றால், கைது செய்ய வேண்டாம். அவர்களது கால்களை உடையுங்கள். பின்னர் என்னிடம் வந்து பாராட்டை பெற்றுக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவே உத்தரவிட்டேன் என நரசிங்கா தெரிவித்துள்ளார். இச்சம்பத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.