
சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் 4 நாட்களாக சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் கரீம் எனும் நகரில் முகமது ஷேஷாத் கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் சவூதி அரேபியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் இவர் ரப் அல் காலி என்னும் பாலைவனத்திற்கு சென்றிருந்தார். இந்த பாலைவனம் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றாகும்.
இந்த பாலைவனம் 650 km பரப்பளவு கொண்டது. இந்த பாலைவனத்திற்கு வேலை பார்ப்பதற்காக சென்ற முகமது ஷேஷாத் கான் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது அவருக்கு வெளியே வர வழி தெரியவில்லை. ஆனாலும் அவர் 4 நாட்களாக தொடர்ந்து வெளியே வருவதற்காக முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் வழியை கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். பாலைவனம் தண்ணீர் இல்லாத பகுதி என்பதால் அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே 4 நாட்களாக போராடி வந்த அவர் தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பாலைவனத்தில் இருசக்கர வாகனம் அருகில் இறந்து போன முகமது ஷேஷாத் கானின் உடல் தற்போது மீட்கப்பட்டது. மேலும் இவரின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.