குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண் குழந்தையை காப்பாற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். அவரது பேச்சை அனைவரும் பாராட்டினர். இதனால் அந்த மாணவி பிரபலமானார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அன்று அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தனது பிறந்த நாளை கொண்டாடுவதாக கூறி மாணவியை ஒரு தனியார் ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.

தனது நண்பர் விருந்து கொடுக்கிறார் என்றும் இதனை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதன் பின் ஹோட்டலுக்குச் சென்ற அந்த மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். அப்போது ஆசிரியர், உன்னை தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ஆசிரியர் மீதும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியரின் நண்பர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.