
கர்நாடகாவில் விஜயபுராவில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்து உள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞ7ர் அருகில் உள்ள 100 அடி 7 உள்ள டவர் உச்சியில் ஏறி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டல் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளைஞரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் கழித்து இளைஞரை மீட்டனர். இந்நிலையில் அவரிடம் தற்கொலைக்கு காரணம் என்ன என்று கேட்ட காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் செய்து வைக்க கேட்டபோது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி கூறியதால் இந்த முடிவை எடுத்ததாக இளைஞர் தெரிவித்துள்ளார்.