
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மகாத்மா காந்தி அவங்க சொன்னாங்க. மனிதனுக்கு ஏழு காடினஸ் இருக்கு. அதுல ரெண்டு முக்கியமானது அரசியல்வாதிக்கு பொருந்தும். ஒன்று பாலிடிக்ஸ் கொள்கை. கொளகை இல்லாம அரசியல் செஞ்சீங்கன்னா… பெரும் குற்றம் என்கிறார்கள். 2.) நீ பணமே சம்பாதிக்காமல் நீ வாழ்கின்றாய் என்றால் ? அதுவும் குற்றம் தான்… முழுநேர அரசியலா இருந்தா எப்படி… முழு நேர அரசியல்வாதியாக இருந்தால் காந்தி சொன்ன 2 குற்றங்கள்..
இந்த ரெண்டையும் உடைக்கணும்னு நினைக்கிறேன். காலமாகும், நேரம் ஆகும். என்னுடைய பாணில நான் இருக்கேன். உன்கிட்ட நான் சத்தமா பேசுறேன்.. ஆக்ரோஷமா பேசுறேன்… அதெல்லாம் இல்ல… அந்த சிஸ்டர் மேல எனக்கு மதிப்பு இருக்கு, அதனால சொல்றேன். எனக்கும் தெரியும் இங்க கேட்குற கேள்வியை அப்படியே ட்விஸ்ட் பண்ணி ADMKகிட்ட போய் அண்ணாமலை பொறுத்து பார்க்கலாம் என சொன்னாரு உங்க கருத்து என்ன ?
ஜெயக்குமார் அண்ணா, செல்லூர் ராஜீ அண்ணன் கிட்ட போய் கேட்பீங்க.. அவரு சொன்னதும்.. அவரு அப்படி சொன்னாரு ? உடனே கூட்டணி 3ஆக உடைச்சி போட்ச்சான்னு இதான 2 வருஷம் தமிழக ஊடகத்துல நடக்குது. எனக்கு தெரியாதா ?பிஜேபிக்கு ஒரு ரிப்போர்ட்டர். டிஎம்கே_க்கு ஒரு ரிப்போர்ட்டர். ஏடிஎம்கே-க்கு ஒரு ரிப்போர்ட்டர். 3 ரிப்போர்ட்டர். மாத்தி மாத்தி சொல்லுவீங்க.. இப்போ இங்க கேட்டதும் உடனே அங்க போயிருவாங்க.
ஜெயக்குமார் அண்ணன் கிட்ட போய் பொறுத்திருந்து பாருங்கள் என அண்ணாமலை சொல்லி விட்டார் என கேட்பாங்க. அப்போ நாளைக்கு ரீலிஸ் பண்ணுவாரான்னு கேட்பாங்க. ஜெயக்குமார் அண்ணன் சொன்ன உடனே முடிஞ்சது உடனே டமால் டுமால் என போட்டு உடைத்து விட வேண்டியது. அதனால் தான் சொல்றேன். ஒரு கண்ணியமும், ஒரு நேர்மையும், ஒரு லட்சுமண ரேகையும் ஊடக அறமும் இருக்கட்டும். எந்த கேள்விக்கும் ”பொறுத்திருந்து பாருங்கள்” என ஒரே பதில் சொல்லிட்டு போய் இருக்கலாமே..
இளைஞர்கள் யாராவது பிரஸ்மீட் பார்த்தாங்கன்னா… அவங்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். அதனால நான் நேர்மையா இருக்கேன். என்ன பொருத்தவரை… நீங்களும் அந்த நேர்மையை அறத்தை கடைபிடிங்க அப்படின்னு தான் என்னோட கேள்வி. நான் எந்த கேள்வியையும் ஒளிச்சி மறைக்கவில்லை. எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுறேன் என தெரிவித்தார்.