இளம்பெண்கள் நாளுக்கு நாள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக பணத்தை செலவு செய்கின்றனர். அதோடு காது, உதடு அணிகலன்கள் உட்பட அழகு சாதன பொருட்களை வாங்குவதற்கும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் தனது தாயின் நகைகளை திருடி ரூ.700-க்கு விற்ற சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. சீனாவில் வசிக்கும் வாங் என்ற பெண் ஒருவர் தனது வீட்டில் ஒரு மில்லியன் யுவான் மதிப்பிலான வளையல், நெக்லஸ் மற்றும் ரத்தின கற்கள் பதித்த நகைகள் வைத்திருந்தார். இதன் இந்திய மதிப்பு சுமார் 1.2 கோடி ஆகும்.

இந்நிலையில் இந்த நகைகள் திருடப்பட்டு உள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வாங்கின் மகள் லீ தான், அந்த நகைகளை திருடி விற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் லீயிடம் விசாரணை நடத்தினர். அப்போது எனக்கு உதடு அணிகலன்கள் வாங்க பணம் தேவைப்பட்டது. அதனால் என்னுடைய வீட்டில் இருந்த நகைகளை கவரிங் நகைகள் என்று நினைத்து அவற்றை 700 க்கு விற்று ஒரு ஜோடி உதடு அணிகலன்கள் வாங்கியதாக கூறினார். பின்னர் அவர் விற்பனை செய்த கடைக்கு சென்று நகைகளை மீட்டு காவல் துறையினர் வாங்கிடம் ஒப்படைத்தனர்.