முன்னதாக தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது.

பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தற்போது ஆளுநர்  ரவி மீது குற்றம்சாடியுள்ளார். அதாவது தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை பேரவையில் நிறைவேற்றி 40 நாட்கள் ஆகிவிட்டது.

ஆனால் இன்னும் அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை சந்திக்க. நேரம் கொடுத்தால் மசோதாவை குறித்து கேட்பார்கள் என்று பயந்து போய் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு நேரம் தராமல் இழுத்தடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என்று நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.