
கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அம்ரபாலி லெஷர் வேலி, செக்டர் 2-ல் வசிக்கும் சாயா சர்மா என்பவர், ஸ்விக்கி மூலம் வெஜிடேரியன் பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், அதற்கு பதிலாக சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முழுமையான சைவ உணவினரான சாயா, அந்த உணவை இரண்டு, மூன்று முறை சாப்பிட்ட பிறகே அது சிக்கன் பிரியாணி என்பதைக் கவனித்ததாக கூறியுள்ளார்.
इन दीदी का अलग ही दुख दर्द है क्या ही कहा जाए।
नोएडा की छाया शर्मा ने स्विगी से वेज बिरयानी ऑर्डर की, लेकिन घर पर आई चिकन बिरयानी।
छाया कहती हैं– उन दिनों नवरात्र चल रहे थे। मैं प्योर वेजेटेरियन हूं। मैंने गलती से एक–दो बाइट खा भी ली।#viralvideo #ViralVideos #zeudiners pic.twitter.com/U56mdHU1JG
— Dhiraj yadav (@Dhirajy73279653) April 7, 2025
அதனால் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானதாகவும், உணவு வழங்கிய ஹோட்டல் “லக்னோவி கபாப் பராத்தா” ஆர்டர் வந்த பிறகு உடனே மூடப்பட்டதாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். சாயா தனது வீடியோவில், “இது திட்டமிட்ட முறையில் நடந்திருக்கலாம்” என்றும், ஸ்விக்கி இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவலாக பரவி, சைவ உணவுப் பயனாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பொருட்களின் சரியான வகை மற்றும் தரத்தைக் கண்காணிக்க தவறுவது பயனர்களுக்கு உணர்ச்சிவசப்படுத்தும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இந்தக் குற்றச்சாட்டில் ஸ்விக்கி ஏதாவது விளக்கமளிக்குமா என்பதை பொது மக்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.