
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களை வித்தியாசமான முறையில் திருட்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதே போன்று சமீபத்தில் காரில் வந்த நபர் மற்றொரு காருக்கு போடப்பட்டிருந்த உறையை திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது அந்த வீடியோவில், காரில் வந்த முகமூடி அணிந்த ஒரு நபர் ஒருவர் காரை நிறுத்திவிட்டு, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு அருகில் நின்ற மற்றொரு காருக்கு மூடப்பட்டிருந்த உறையை திருடி தனது காரில் வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
जितनी जरूरत थी उतना ले लिया 🤓🤓 pic.twitter.com/whqvQTYsBb
— Professor of memes (@prof_desi) June 21, 2025
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சிலர் அந்த வீடியோவுக்கு எதிரான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.