உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே இளைஞனை தலை முடியை இழுத்து, செருப்பால் அடித்து, கடுமையாக தாக்கினர்.

இந்த சம்பவம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் இளைஞனை தாக்கும் போது அருகில் பொதுமக்கள் இருந்த நிலையிலும் யாரும் அவர்களை தடுக்கவில்லை. மாறாக “அவர்கள் சரியானதை தான் செய்கிறார்கள்” என்று ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீஸ் கவனத்திற்கு புகார் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்மணிகளின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.