
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக தனது உறவினரின் 2 வயது குழந்தை ப்ரித்வியை கடத்திய தனுஜ் என்பவரை விட்டு பிரிய மனமின்றி குழந்தை கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 மாதங்களாக தனுஜுடன் வாழ்ந்து வந்த ப்ரித்வி, தனது உண்மையான தாயுடன் செல்ல மறுத்து அடம்பிடித்தது. தனுஜும் குழந்தையை பிரியும் வலியில் கதறி அழுத நிலையில், போலீசார் தனுஜை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
குழந்தை ப்ரித்வியின் தாய், குழந்தையை தனது வசம் பெற்றுக்கொண்டார். கடத்தியவராக இருந்தாலும் பெற்ற தாயிடம் செல்ல குழந்தை மறுக்கிறதெனில் அவர் குழந்தையை பார்த்துக் கொண்டுள்ளார் என நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.