
பஞ்சாப் லூதியானாவில் உள்ள பகுதியில் ராகவ் ராஜேஷ் அகர்வால்(26) என்ற இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணும் டெல்லியில் நடந்த கண்காட்சியில் சந்தித்துள்ளனர். பின்பு அவர்களுக்கு இடையில் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்த நிலையில், அகர்வால் அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் பாலியல் உறவில் இருந்துள்ளனர்.
அதாவது அந்த இளைஞர் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 2024 வரை இளம்பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அந்த பெண் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த நிலையில் திருமணத்திற்காக ஒரு மண்டபத்தை முன்பதிவு செய்வதாக கூறி சென்றார், பின்னர் அதனையும் நிறுத்திவிட்டார்.
பின் அந்த பெண்ணிடம் அதிகப்படியான வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இவ்வாறு திருமணம் செய்யாமல் தட்டிக்கழித்து வந்ததுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அகர்வாலை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.