கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில் பாளையம் அருகே இருக்கும் பண்ணாரி அம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காளிமுத்து- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதே குடியிருப்பில் காளிமுத்து காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காளிமுத்துவும், பிரியாவும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி காளிமுத்துவை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். மேலும் அவர் குடியிருந்த வீட்டையும் காலி செய்யுமாறு கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் காளிமுத்து தனது மனைவியுடன் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.