
நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு கனோ மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று பாலத்தின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர். இதில் சில பேர் மட்டுமே உயிர் தப்பி உள்ளனர். நைஜீரியாவில் சாலைகள் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் இந்த பிரச்சனை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பல்வேறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்துள்ள இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து கீழே விழுந்த போது சாலையில் வேற எந்த வாகனமும் செல்லவில்லை என்றும் டிரைவரின் சோர்வு மற்றும் அதிகப்படியான வேகம் மட்டுமே காரணம் என்றும் கூறப்படுகிறது.