சமூக ஊடகங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் கொண்ட கீர்த்தி படேல் என்ற இளம்பெண், கடந்த ஆண்டு சூரத்தில் ஹனிட்ராப் செய்து கட்டிடக் கலைஞரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில், கடந்த 2023 ஜூன் 2ஆம் தேதி சூரத்தில் ஒரு கட்டிடக் கலைஞரிடம்  ஹனிட்ராப் முறையில்  மோசடி செய்து, பின்னர் மிரட்டல்  பெரும் தொகை பணம் கேட்டுள்ளார். இது தொடர்பாக படேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சூரத்திலுள்ள நீதிமன்றம் வாரண்டும் பிறப்பித்தது.

அந்த வழக்கில் மேலும் 4 பேர் முன்பே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், கீர்த்தி படேல் நகரங்களை மாற்றியும், தொலைபேசி எண்கள், சிம் கார்டுகள், ஐபி முகவரிகளை மாற்றியும் போலீசாரை தவிர்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து சைபர் நிபுணர்களின் உதவியுடன் அவரது இருப்பிடம் அகமதாபாத்தின் சர்கேஜ் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த போலீசாருடன் தொடர்பு கொண்டு, அவரைக் கைது செய்யப்பட்டதாக  துணை கமிஷனர் அலோக் குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “நாங்கள் 10 மாதங்களாக தொடர்ந்து அவரை கண்காணித்து வந்தோம். அவருடைய செயல்பாடுகள் பல பகுதிகளுக்கு மாறியது, அதனால்தான் கைது சிரமமானது. இந்த வழக்கில் மட்டுமல்ல, நில அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான பிற புகார்களிலும் அவர் தொடர்புடையவர் எனப் பதிவாகியுள்ளது. அனைத்துச் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.”

அத்துடன், பொதுமக்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்: “இந்த வகை மிரட்டல் சம்பவங்களில் சிக்கியவர்கள், அருகிலுள்ள காவல் நிலையம், ஏசிபி அல்லது டிசிபி அலுவலகத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம்.”

இந்த கைது சமூக ஊடகங்களின் பொது பொறுப்பியல் மீதான புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் புகழ் பெறுவது மட்டுமல்லாமல், அதனை தவறாக பயன்படுத்தும் சிலர் எதிர்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கான எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.