
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீப காலமாக நடிகராகவும் களமிறங்கி நடித்து வருகிறார். இவர் விடுதலை பாகம் 1, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார். அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார்.