
மத்திய அரசின் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் கூறியதாவது, அனைத்து மாநில அரசுகளும் உள்ளூர் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அதற்கான நிர்வாகப் பணிகளுக்கு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உதவ தயாராக உள்ளது. நாங்கள் எந்த மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. இந்தி எந்த இந்திய மொழியையும் எதிர்க்கவில்லை.
அனைத்து மொழிகளுக்கும் அது நண்பன். அதேபோன்று எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இல்லை. ஒருவர் தனது சொந்த மொழியை போற்றுவதற்கு, பேசுவதற்கு, சிந்திப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும் என கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக எம்.பி கனிமொழி கூறியதாவது, “சரியாக சொன்னீங்க அதை தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில் பேசுங்க நாங்க எங்க மொழியில் பேசுறோம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், இதற்கெல்லாம் தனியா ராஜ் பாஷா தேவையில்லை. அந்தப் பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சித் துறையின் மாத்திடலாம் என தெரிவித்துள்ளார்.