
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் ஓசதுர்கா தாலுகாவைச் சேர்ந்த ஹூவினநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (30). இவருக்கு அப்பகுதியை சேர்ந்த திருமணமான கிரண் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் கிரணுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இச்சூழலில் சீனிவாஸ் கிரனை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சீனிவாசுக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை கிரண் கண்டறிந்தார். அதனால் சீனிவாசை விட்டு பிரிந்துள்ளார். இருப்பினும் சீனிவாஸ், கிரணை விடாமல் வீட்டிற்கு வந்து அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிரண் தனது தம்பி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து நேற்று முன் தினம் சீனிவாசஸை வீடு புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலையாளிகளான சாகர், அபிஷேக், கிரண் குமார் ஓசதுர்காவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சஞ்சுரியப்பா, அஸ்வந்த் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கொலை குற்றத்தில் முக்கிய குற்றவாளிகளான சாகர் அபிஷேக் கிரண் குமார் ஆகியோரின் சகோதரியான கிரண் ஆகியோரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.