
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தியது பாஜக. அதன் பின் ரேகா குப்தா தற்போதைய டெல்லி முதல்வர் ஆனார்.
ஆம் ஆத்மி கட்சி தோல்விக்கு மிக முக்கியமான காரணம் மதுபானம் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறை சென்றது என கூறப்படுகிறது.
இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஷிஷ்மஹால் பிரச்சாரம். அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் இருந்த போது முதல்வர் பங்களாவை ஆடம்பரமாக மாற்றி வாழ்ந்தார் என பாஜக தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரப்பட்ட பதிலை சுட்டிக்காட்டி, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது, பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள முதல்வர் பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் பராமரிக்க கடந்த மார்ச் 31, 2015 முதல் டிசம்பர் 27, 2022 வரை மொத்தம் 29.56 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார்.
அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாய் பங்களாவை பராமரிக்க செலவிடப்பட்டுள்ளது. இதனை விசாரிக்க டெல்லி அரசிடம் கோரிக்கை வைப்போம் என தெரிவித்துள்ளார்.