
சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டியில் ஆர் சி பி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் முன்னாள் ஆர் சி பி வீரரும், தற்போது குஜராத் அணியின் வீரருமான முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் சிராஜ் உண்மையில் பெங்களூர் அணிக்கு பதிலடி கொடுக்கவில்லை, இந்திய அணிக்கு கொடுத்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது சாம்பியன் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனதளவில் வேதனை அடைந்தார். அதனால் அவர் அவருக்குள் நெருப்பு உருவாகியுள்ளது. அதை நான் பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளரிடம் நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான். என்னை தேர்வு செய்யாத உங்களுக்கு தற்போது என்னுடைய திறமையை காட்டுகிறேன் என்ற வகையில் அவர் செயல்படுகிறார். அவர் இன்னும் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
சின்னச்சாமி மைதானத்தில் புதிய பந்தில் அவர் தனது சாதனையை தக்கவைத்துக் கொண்டார். தனது முதல் மூன்று ஓவர்களில் அவர் 12-13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதே சமயத்தில் நான்காவது ஓவரை வீசியிருந்தால் அவர் விக்கெட் எடுத்திருப்பார். பீட்ச்சில் கிடைத்த உதவியை பயன்படுத்தி அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து அசத்தினார் என்று தெரிவித்தார்.