
அதிமுக செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ஒன்றை மட்டும் நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சூழலை பொறுத்துதான் கூட்டணி அமையும். தேர்தல் நெருங்கும் போது தான் அது முடிவு செய்யப்படும் என்றார்.
அதோடு அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகனான துணை முதல்வர் உதயநிதியை பற்றிய அதிகம் கவலை கொள்வதாக விமர்சித்தார். உதயநிதி அமைச்சர் பணியில் சிறப்பாக செயல்பட்டு 100 மதிப்பெண் பெற்றுள்ளதாக அவர் பெருமைப்பட்டார் என்று கூறினார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் பெயில் ஆகி விட்டார்களா? என்று கேள்வியையும் எழுப்பினார். முன்னதாக, முதல்வர் உதயநிதி அமைச்சர் பணியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.