குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விமானத்தில் பயணித்து வந்தது குறிப்பிடத்தக்கது. விபத்தின் போது விமானம் ஒரு மரத்தில் மோதியதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மொத்தம் 241 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.  இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை தற்போது 274 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த விமான விபத்தில் 11A இருக்கையிலிருந்து விஸ்வாஸ் கீழே குதித்து உயிர் தப்பினார். இதேபோன்று கடந்த 1998 ஆம் ஆண்டு தாய்லாந்து விமான விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் தான் 11A  இருக்கையில் இருந்து தான் குதித்து உயிர் தப்பியதை தாய்லாந்து பாடகர் ருவாங்சாக் லோய்ச்சுசாக் நினைவுகூர்ந்துள்ளார். மேலும் தன்னைப்போல் விஸ்வாஷும் 11A  இருக்கையில் பயணித்து உயிர் தப்பியத்தை கேட்டு புல்லரித்ததாக அவர் கூறியுள்ளார்.