
தென்காசியில் கடையம் அருகே உள்ள பகுதியில் ஆறுமுகம்(87) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயி. இவர் கடந்த 4-ம் தேதி அன்று திடீரென வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி அன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆறுமுகத்தின் மகள் அரியபுரத்தில் வசித்து வருகிறார். அவருடைய மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள ஆறுமுகத்தை அவரது பெயரின் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.