
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் மனிதக்கழிவை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா அல்லது மர்ம நபர்களா என்பது குறித்து பல்லடம் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் பயிலும் பள்ளியின் வகுப்பறைக்குள் இவ்வாறு மனித கழிவுகள் வீசப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.