
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 13 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் தற்போது 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.